தமிழ்
Surah An-Naba' ( The Great News ) - Aya count 40
عَمَّ يَتَسَاءَلُونَ 
( 1 ) 
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
عَنِ النَّبَإِ الْعَظِيمِ 
( 2 ) 
மகத்தான அச்செய்தியைப் பற்றி,
الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ 
( 3 ) 
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
كَلَّا سَيَعْلَمُونَ 
( 4 ) 
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ 
( 5 ) 
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا 
( 6 ) 
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
وَالْجِبَالَ أَوْتَادًا 
( 7 ) 
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا 
( 8 ) 
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا 
( 9 ) 
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا 
( 10 ) 
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا 
( 11 ) 
மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا 
( 12 ) 
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا 
( 13 ) 
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا 
( 14 ) 
அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا 
( 15 ) 
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
وَجَنَّاتٍ أَلْفَافًا 
( 16 ) 
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا 
( 17 ) 
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا 
( 18 ) 
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا 
( 19 ) 
இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا 
( 20 ) 
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا 
( 21 ) 
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
لِّلطَّاغِينَ مَآبًا 
( 22 ) 
வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.
لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا 
( 23 ) 
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا 
( 24 ) 
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا 
( 25 ) 
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
جَزَاءً وِفَاقًا 
( 26 ) 
(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا 
( 27 ) 
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا 
( 28 ) 
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا 
( 29 ) 
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا 
( 30 ) 
"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا 
( 31 ) 
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
حَدَائِقَ وَأَعْنَابًا 
( 32 ) 
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
وَكَوَاعِبَ أَتْرَابًا 
( 33 ) 
ஒரே வயதுள்ள கன்னிகளும்.
وَكَأْسًا دِهَاقًا 
( 34 ) 
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا 
( 35 ) 
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا 
( 36 ) 
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا 
( 37 ) 
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا 
( 38 ) 
ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا 
( 39 ) 
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا 
( 40 ) 
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.